Sunday, September 16, 2018

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். 
இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. 
இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. 
இதனால் இது நாலடி நானூறு எனவூம் பெயர் பெறும். 
பல சந்தர்ப்பங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது. 
வாழ்க்கையின் எளிமையான விடயங்களை உவமானங்களாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. 
திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.
திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.
திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். "
ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.

கடவுள் வாழ்த்து


அறத்துப்பால்

  1. செல்வம் நிலையாமை

  2. இளமை நிலையாமை

  3. யாக்கை நிலையாமை

  4. அறன் வலியுறுத்தல்

  5. துய்தன்மை

  6. துறவு

  7. சினம் இன்மை

  8. பொறையுடைமை

  9. பிறர்மனை நயவாமை

  10. ஈகை

  11. பழவினை

  12. மெய்ம்மை

  13. தீவினையச்சம்

பொருட்பால்



  1. கல்வி

  2. குடிப்பிறப்பு

  3. மேன்மக்கள்

  4. பெரியாரைப் பிழையாமை

  5. நல்லினம் சேர்தல்

  6. பெருமை

  7. தாளாண்மை

  8. சுற்றந்தழால்

  9. நட்பாராய்தல்

  10. நட்பிற் பிழை பொறுத்தல்

  11. கூடா நட்பு

  12. அறிவுடைமை

  13. அறிவின்மை

  14. நன்றியில் செல்வம்

  15. ஈயாமை

  16. இன்மை

  17. மானம்

  18. இரவச்சம்

  19. அவையறிதல்

  20. புல்லறிவாண்மை

  21. பேதைமை

  22. கீழ்மை

  23. கயமை

  24. பன்னெறி

காமத்துப்பால்



  1. பொது மகளிர்

  2. கற்புடை மகளிர்

  3. காமநுதலியல்

Friday, September 14, 2018

பகுதி - (இ) - தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்


  1. பாரதியார்,
  2.  பாரதிதாசன்,
  3. நாமக்கல் கவிஞர்,
  4. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள் , சிறந்த தொடர்கள்சிறப்புப் பெயர்கள்
  5. மரபுக்கவிதை  - முடியரசன், வாணிதாசன் ,
  6. சுரதா, கண்ணதாசன்,
  7. உடுமலை நாரயனகவி ,
  8. பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம்,
  9. மருதகாகி தொடர்பான செய்திகள் அடைமொழி பெயர்கள்.
  10. புதுக் கவிதை - .பிச்சமுர்த்தி,
  11. சி. சுசெல்லப்பா , தருமு சிவராமு,
  12. பசுவய்யா,
  13. இரா.மீனாட்கி,
  14. சி.மணி,
  15. சிற்பி,
  16. மு.மேத்தா,  
  17. ஈரோடு தமிழன்பன்,
  18. அப்துல்ரகுமான்,
  19. கலாப்ரியா,
  20. கல்யாண்ஜி,
  21. ஞானக் கூத்தன்,
  22. தேவதேவன்,
  23. சாலை  இளந்திரையன்',
  24. சாலினி இளந்திரையன்
  25. ஆலந்தார் மோகனரங்கன்தொடர்பான செய்திகள் 
    மேற்கோள்கள் , சிறப்புப் தொடர்கள் மற்றும் எழுதிய நால்கள்.

Suggested Books

6th Samacheer kalvi Tamil language Book Click Here

7th Samacheer kalvi Tamil language Book Click Here

8th Samacheer kalvi Tamil language Book Click Here

9th Samacheer kalvi Tamil language Book Click Here

10th Samacheer kalvi Tamil language Book Click Here

11th Samacheer kalvi Tamil language Book Click Here    

12th Samacheer kalvi Tamil language Book Click Here

 

அறநூல்கள்

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்.
இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு.
திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.
இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).
நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1 அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) பொருட்பால் : 260 பாடல்கள் (26 அதிகாரஙள்) காமத்துப்பால் : 10 பாடல்கள் (1 அதிகாரம்) மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று.
இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.
இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும்,
நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது.
இதன் ஆசிரியர் விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார்

பழமொழி நானூறு

பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்டது.
சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் அல்லது மூன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது.
இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.
இதன் காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது
இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரபட்டுள்ளன.

    கல்வி (10)
    கல்லாதார் (6)
    அவையறிதல் (9)
    அறிவுடைமை (8)
    ஒழுக்கம் (9)
    இன்னா செய்யாமை (8)
    வெகுளாமை (9)
    பெரியாரைப் பிழையாமை (5)
    புகழ்தலின் கூறுபாடு (4)
    சான்றோர் இயல்பு (12)
    சான்றோர் செய்கை (9)
    கீழ்மக்கள் இயல்பு (17)
    கீழ்மக்கள் செய்கை (17)
    நட்பின் இயல்பு (10)
    நட்பில் விலக்கு (8)
    பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7)
    முயற்சி (13)
    கருமம் முடித்தல் (15)
    மறை பிறர் அறியாமை (6)
    தெரிந்து தெளிதல் (13)
    பொருள் (9)
    பொருளைப் பெறுதல் (8)
    நன்றியில் செல்வம் (14)
    ஊழ் (14)
    அரசியல்பு (17)
    அமைச்சர் (8)
    மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
    பகைத்திறம் தெரிதல் (26)
    படைவீரர் (16)
    இல்வாழ்க்கை (21)
    உறவினர் (9)
    அறம் செய்தல் (15)
    ஈகை (15)
    வீட்டு நெறி (13)

முதுமொழிக்காஞ்சி


மதுரைப் பதியைச் சேர்ந்த கூடலூர்க் கிழார் என்பவர் இயற்றியது முதுமொழிக்காஞ்சி.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் நூல் தொகுதியில் மிகச் சிறியது இது.
ஒவ்வொன்றும் பத்து அடிகளைக் கொண்ட பத்துப் பாடல்களை மட்டுமே கொண்டுள்ளது.
இந் நூலிலுள்ள எல்லாப் பாடல்களுமே,     ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் என்றே தொடங்குகிறது.
பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப் பத்துப் பெயர்களும் வருமாறு:

    சிறந்த பத்து
    அறிவுப் பத்து
    பழியாப் பத்து
    துவ்வாப் பத்து
    அல்ல பத்து
    இல்லைப் பத்து
    பொய்ப் பத்து
    எளிய பத்து
    நல்கூர்ந்த பத்து
    தண்டாப் பத்து

திரிகடுகம்


திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

இன்னா நாற்பது

நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் நான்கு கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும் இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன.
கபிலர் என்னும் புலவர் இயற்றியது இன்னா நாற்பது என்னும் நூல்.
நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  நூற் தொகுதியுள் அடங்குவது.
உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல்.
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன.
ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது.
ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.

இனியவை நாற்பது

பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.
உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம்.
ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

ஏலாதி

பதினெண்கீழ்க்கணக்கு நூல் தொகுப்பில் அடங்கிய பண்டைத் தமிழ் நீதி நூல்களில் ஒன்று ஏலாதி.
சமண சமயத்தைச் சேர்ந்தவரான கணிமேதாவியார் என்பரால் எழுதப்பட்டது இந்நூல். திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே.
ஏலாதியில் 80 பாடல்கள் உள்ளன. இந்நூலின் பெயர் ஏலத்தை முதலாகக் கொண்ட ஆறு பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஏலாதி என்னும் மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி ஏற்பட்டது. இந்நூலிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அதன் கருப்பொருள் தொடர்பில் ஆறு நீதிகளைக்கூறி மக்களின் ஒழுக்கக் குறைவுக்கு மருந்தாவதால் இந்நூலுக்கும் ஏலாதி என்ற பெயர் ஏற்பட்டது.

சிறுபஞ்சமூலம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் அய்ந்து விடயங்கள் இருப்பதில்லை. இந் நூலை இயற்றியவர் காரியாசான் காரியாசான் என்ற சமணப் புலவர்.
தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்கு கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து,இந்நூல் ஒழுக்கக்கேட்டுக்கு மருந்தாகிறது.

ஔவையார்

எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.

அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார். ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.

ஔவையாரால் பாடப்பட்ட அரசர்கள்

வேந்தர்

    சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்

வள்ளல்கள்

    அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி ஆகிரோரை ஔவை பல பாடல்களில் போற்றியுள்ளார்.
    மூவேந்தர் பறம்புமலையை முற்றியிருந்தபோது அவன் வளர்த்த குருவிப் பாட்டம் பறந்து சென்று நெற்கதிர்களைக் கொண்டுவந்து தந்து பாரிக்கு உணவளித்தனவாம்.
    விறலியர் சமைத்த கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்கு ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் அரிசி கேட்டாராம். இந்த வள்ளுவன் தன் தகுதிக்கு அரிசி தருவது இழிவு எனக் கருதி போர்க்களிறு ஒன்றைப் பரிசாகத் தந்தானாம். இதனைத் தேற்றா ஈகை எனக் குறிப்பிட்டு ஔவை வருந்துகிறார்.

திருக்குறள் தொடர்பான செய்திகள்


1. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் - ஊழியல் (அதிகாரம்: ஊழ்)

2. அறத்துப்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 38 அதிகாரங்கள், 4 இயல்கள்

3. பொருட்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 70 அதிகாரங்கள், 3 இயல்கள்

4. இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரம் மற்றும் இயல்களின் எண்ணிக்கை - 25 அதிகாரங்கள், 2 இயல்கள்

5. திருக்குறளில் ஒரே பெயரில் இருமுறை வரும் அதிகாரம் - குறிப்பறிதல்

6. வழக்கு என்பதன் பொருள்  - வாழ்க்கை நெறி

7. என்பு என்பதன் பொருள் - எலும்பு

8. திருக்குறளில் உள்ள இயல்கள் - 9

9.  படிறு என்பதன் பொருள் - வஞ்சம்

10. திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000

11. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42,194

12. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்

13. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - மூங்கில், பனை

14. திருக்குறளை ஆங்கிலத்தில் முதன் முதலில் மொழிபெயர்த்தவர் - ஜி.யூ. போப்

15. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

பகுதி - (ஆ) - இலக்கியம்


பகுதி - () - இலக்கியம்
  1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
      1. அன்பு - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 2 
      2. பண்புஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 114
      3. கல்வி - ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 105
      4. கேள்வி
      5. அறிவு
      6. அடக்கம்
      7. ஒழுக்கம் - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 3
      8. பொறை -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 3
      9. நட்பு,  ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 2
      10. வாய்மை  - 7 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 3
      11. காலம் - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 5
      12. வலி
      13. ஓப்புரவறிதல்
      14. செய்நன்றி
      15. சான்றாண்மை -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 144
      16. பெரியரைத்துணைக்கோடல் 
      17. பொருள்செயல்வகை
      18. வினைத்திட்பம்
      19. இனியவை கூறல் - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 80
  2. அறநூல்கள் 
a.       நாலடியார் - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 16
b.      நான்மணிக்கடிகை - 6 ஆம்  வகுப்பு தமிழ், பக்கம் 30  
c.       பழமொழி நானுறு - 6 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 43
d.      முதுமொழிக்காஞ்சி - 7 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 20
e.       திரிகடுகம்- 7 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 36
f.       இன்னா நாற்பது
g.      இனியனவ நாற்பது, - 8 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 22
h.      சிறுபஞ்சமூலம் -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 29
i.        ஏலாதி, - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 11
j.        ஓளவையார்  
o    பாடல்கள் தொடர்பான செய்திகள், பதிநென்ண்கீழ்க்கணக்கு நால்களில் பிற செய்திகள் 

                                                      * கம்பராமாயணம் தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை , சிறந்த தொடர்கள் - 8 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 153, - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 57
                         
         * புறநானுறு - 6 ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 67, ஆம்  வகுப்பு தமிழ் பக்கம்19, -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 54,  10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 88

b.      நற்றிணை - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 86
c.       குறுந்தொகை -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 55
d.      ஐங்குறுநாறு 
e.       கலித்தொகை 
                   * தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை
f.       எட்டுத்தொகை
g.      பத்துப்பாட்டு நால்களில் 
              * உள்ள பிற செய்திகள்
                         
        * சிலப்பதிகாரம், - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 32

a.       மணிமேகலை -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 118
              * தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் 
b.      ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்
                         
      * பெரியபுராணம் - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 104

a.       நாலாயிர திவ்யப்பிரபந்தம் - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 105
b.      திருவிளையாடற் புராணம் -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 191
c.       தேம்பாவணி - 8 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 98
d.      சீறாப்புராணம் - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 173
                * தொடர்பான செய்திகள்

                        சிற்றிலக்கியங்கள்

      *திருக்குற்றாலக்குறவஞ்சி - 

a.       கலிங்கத்துப்பரணி -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 100
b.      முத்தொள்ளாயிரம், -  9 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 98
c.       தமிழ்விடு தாது - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 127
d.      நந்திக்கலம்பகம்
e.       விக்கிரமசோழன் உலா, - ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 81
f.       முக்கூடற்பள்ளு
g.      காவடிச்சிந்து - ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 79
h.      திருபவேங்கடத்தந்தாதி
i.        முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், - ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 173
j.        பெத்தலகேம் குறவஞ்சி,
k.      அழகர் கில்லைவிடுதூது

l.        இராஜராஜன் சோழன் உலா 
   
              * தொடர்பான செய்திகள்

                        மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல்

காளமேகப்புலவர் -அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்

                        நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்


                        சமய முன்நோடிகள் 
 .        அப்பர்
a.       சம்பந்தர்
b.      சுந்தர்
c.       மானிக்கவாசகர், - 10 ஆம்  வகுப்பு தமிழ்பக்கம் 1
d.      திருமுலர், - ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 97
e.       குலசேகர ஆழ்வார், - ஆம்  வகுப்பு தமிழ் பக்கம் 98
f.       ஆண்டாள்
g.      சீத்தலைச் சாத்தனார் , 
h.      எச். கிருஷ்ண பிள்ளை , 
i.        உமறுப்புலவர்
  
               * தொடர்பான செய்திகள் 

மேற்கோள்கள் , சிறப்புப் பெயர்கள்.