Wednesday, September 12, 2018

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

இலக்கணம் - பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

தேர்வில் நான்கு சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் மூன்று சொற்கள் ஒரே பொருளையோ ஒரே காலத்தையோ சார்ந்திருக்கும். ஒரு சொல் மட்டும் பொருந்தாமல் தனித்து நிற்கும். அச்சொல் எதுவென கண்டறிய வேண்டும்.


மேலும் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை தெரிந்து கொண்டால் இன்னும் எளிமையாக இருக்கும்

1. பெண்களின் ஏழு பருவங்கள் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்

2. எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநு}று, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானு}று, புறநானு}று

3. நவரத்தினங்கள் - மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம்

4. நவதானியங்கள் - நெல், துவரை, பச்சைப்பயறு, உளுந்து, எள், அவரை, கடலை, கொள்ளு, கோதுமை

5. ஆண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

6. பெண்பால் பிள்ளைத்தமிழ் 10 பருவங்கள் - காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மாணை, கழங்கு, ஊசல்

7. புறத்திணை - வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை

8. தொல்காப்பிய அகப்பொருள் கோட்பாடுகள் - முதல் பொருள், கருப்பொருள், உரிப்பொருள்

9. இரட்சண்ய யாத்திரிகத்தின் ஐந்து பருவங்கள் - ஆதிபருவம், குமாரப் பருவம், நிதான பருவம், ஆரண்யப் பருவம், இரட்சண்ய பருவம்

10. இராவண காவியத்தின் ஐந்து காண்டங்கள் - தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க் காண்டம்

11. பாஞ்சாலி சபதத்தின் ஐந்து சருக்கங்கள் - சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம்

12. மூவகை மொழிகள் - தனிமொழி, பொதுமொழி, தொடர்மொழி

13. உறுதிப் பொருள்கள் - அறம், பொருள், இன்பம், வீடு

14. திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி

15. தேவாரம் பாடிய மூவர் - சம்பந்தர், அப்பர், சுந்தரர்

No comments:

Post a Comment